Friday 4 July 2014

நீங்களும் ஒரு விஞ்ஞானி

ஒரு விஞ்ஞானி என்றால் உங்கள் நினைவுக்கு என்ன வரலாம் ... பள்ளி மற்றும்  கல்லூரிகளில் வரைந்து வைத்திருக்கும் பல விஞ்ஞானிகளின் உருவப்படங்கள் அல்லது அவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாக தோன்றலாம். ஆனால் அவர்கள் சாதாரண மக்களை போன்றே வாழ்ந்தவர்கள்.  இன்றைக்கு விஞ்ஞானம் இல்லையென்றால் நாம்  பழங்குடிகளாகத்தான் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்போம்.

ஆதி மனிதன் என்றைக்கு சிந்திக்க தொடங்கினானோ அன்றைக்கே விஞ்ஞானம் இந்த பூமியில் பிறந்து விட்டது. தாமசு ஆல்வா எடிசன்   ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார்.தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப்  பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரிரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும். பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார்.

எடிசனின் மனதில்   ஒரு தேடுதல், ஆக்கம், விடாமுயற்சி இருந்து கொண்டே இருந்தது. அவர் கண்டுபிடிப்பு இல்லை என்றால் நாம் இருளில் தான் வாழவேண்டியதாய் இருந்திருக்கலாம். அவரை போன்றே நம் தமிழ் நாட்டில் பிறந்து  சாதனைப் படுத்திய ஜி டி நாயுடு பல்வேறு கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துள்ளார். இவரும் பள்ளி படிப்பை சரியாக தொடரதவர். இவர்களை போன்று எண்ணற்ற விஞ்ஞானிகள் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கின்றனர்.

நம்மை போன்று சாதாரண மனிதர்களாக இருந்தும், இவர்களின் பின்னணி என்ன....?
இவர்கள் எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?

1.எப்படி?
2.ஏன்?
3.என்ன?
4.எதற்கு?
5.இப்படி இருந்தால் என்ன?
6.இதை மாற்றி அமைத்தால் என்ன?
7.உருவாக்கம் செய்தால் என்ன?

- இப்படி என்னற்ற வினாக்கள் விஞ்ஞானிகளுக்கு எழுந்திருக்க கூடும். சில நேரங்களில் தோல்வி அடைந்திருப்பார்கள் ஆனால் அவர்களின் விடாமுயற்சியால் பல நேரங்களில் வெற்றியும் அடைந்திருகிறார்கள். அந்த வெற்றிதான் நம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் உதாரணத்திற்கு கணிப்பொறி, தொலைக்காட்சி பெட்டி, மொபைல் மற்றும் பல்வேறு இயந்திரங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பதிவிற்கு வந்து இவிடயத்தை படித்துகொண்டிருக்கும் அன்பரே! நீங்களும் ஒரு விஞ்ஞானி தான். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கற்பனை திறன் உள்ளவர்களாக இருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குளே ஒரு திறமை மற்றும் ஒரு கற்பனை திறன் இருக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் நீங்களும் ஒரு விஞ்ஞானி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

வேளாண்துறையில் நம் நாடு சர்வதேச அளவில் முன்னேறிய நாடு என்றாலும் கூட, வேளாண்துறை சார்ந்த இயந்திரங்கள் கண்டு பிடிப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் சற்று நீண்ட பயணமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் வேளாண் இயந்திரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இறக்குமதியாக இருக்கின்றது. நாம் கண்டு பிடித்த இயந்திரங்களை நாமே பயன்படுத்தலாமே.

இயற்கை உர மேலாண்மையில் மறைந்த இயற்கை விஞ்ஞானி மதிப்புக்குரிய திரு.நம்மாழ்வார் அவர்கள் இயற்கை சார்ந்த உரங்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். அவரை நாம் இழந்தது மிகப்பெரும் இழப்பு. அவரும் பல இயற்கை உரங்களை கண்டு பிடித்து பயன்படுத்த சொன்னார்.

தொடரும்...     














 



Monday 13 January 2014

இஸ்ரேல் வேளாண்மை

இஸ்ரேல் என்ற நாடு  பெரும்பாலும் பாலைவனம் நிறைந்த இடம். அந்த நாட்டில் நடக்கும் விவசாயம் உலகத்தையே தன் கவனத்தின் பால் ஈர்துக்கொண்டிருகிறது என்று சொன்னால் அது தான் உண்மை ...!

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1948-ம்  ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த நாடு. அதன் பிறகு சிதறுண்ட யூதர்கள் தங்கள் சொந்த தாயகத்துக்கு வரத்தொடங்கினர். முற்றிலும் பாலைவனத்தையும், சுற்றிலும் பகை நாடுகளையும் வைத்துக் கொண்டுள்ள அந்நாட்டின் வளர்ச்சி, வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விவசாயத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது என்றால் அது அவர்களின் நீர் மேலாண்மைஎங்கெங்கும் ... பாலைவனமும், சுண்ணாம்புப் பாறைகளும் தப்பித் தவறி மண் இருக்கும் இடத்திலும் ஓரடி ஆழத்துக்கு மட்டுமே மண் எப்பொழுதும் 50 டிகிரிக்கு மேல் வாட்டி எடுக்கும் வெயில் ஆண்டுக்கு வெறும் 200 மி மீ மழைப் பொழிவு மட்டுமே ... குறையாக நினைக்கப்படும் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டே, நிறைய நிறைய சாதிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். பனி பிரதேச நாடுகளில் வளரக்கூடிய பழங்கள் மற்றும் பூக்களை இந்த பாலைவன நிலத்தை மாற்றி, நவீன உத்திகளை கையாண்டு அந்த பழங்களையும் பூக்களையும் குளிர் பிரதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செயிகிறார்கள் என்று ஓரு தினசரி நாளிதழில் படித்தேன். அது உண்மை.


ஆனால் நம் தேசம் எல்லா வளங்களைப் பெற்றிருந்தும் என்ன பயன்? நம்மை  நாமே கேள்வி கேட்டால் என்ன பதில் வரும்? யாரை  குறை  கூறுவது? எத்தனை கேள்விகளை கேட்டாலும் பதில் பலவாறு வரும்?


1. விவசாயம்  பண்ணி  என்ன செய்ய போகிறோம்? 
2. ச் சீ  விவசாயமா அதயெல்லாம் யார் செய்வது ?
3. தண்ணீர் இல்லாத நிலத்தை வைத்து கொண்டு  என்ன செய்வது?
4. நான் இந்த நிலத்தினால் நழ்டம் தான் மிச்சம்.....!
5. நிலத்தை விற்று விட்டு நகரத்துக்கு செல்ல போகிறேன்....!
6. நான் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். விவசயமா?
7. நிலத்தை வீட்டு மனைகளாக்கி பெரும் பணம் பார்க்க போகிறேன்...!


- என்று கேள்வி கேட்ப்பார்கள். இந்த கேள்விகளை கேட்டவர்கள் வீட்டு மனைகாலக விற்று விட்டு, படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  விவசாயத்தை வேறு யாராவது போய் பார்த்து கொள்வார்கள்.  நம்மிடம் தான்  பணம் உள்ளதே...  நாம் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனையோடு நம்மில் எதனை பேர் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை படிக்கும் நண்பரே! நம்மை போல கொஜ்சம் விவசாயம் பார்த்து விவசாய நண்பர்கள் இந்த தொழிலை விட்டு விட்டு வந்து விட்டால் என்ன நடக்கும்?


ஒரு கிலோ அரிசி 500 ரூபாய் விற்கும் காலம் வந்து விடும் நண்பரே! இந்த விடயத்தின் நோக்கம் நாம் எந்த அளவுக்கு வேளாண்மையில் பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது தான். நம் நாட்டு பரப்பளவில் எத்தனையோ இஸ்ரேலை வைக்க முடியும் அந்த அளவுக்கு பரப்பளவில் பெரிய நாடு நம் நாடு.

ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் சென்றது இந்த வருடத்தில். பணவீக்கம் தொடர்ந்து வீக்கமாக தான்  இருக்குமே ஒழிய, ஒரு போதும்  குறையாது. நம்மிடத்தில் கங்கை, பிரமபுத்திரா, யமுனை என்ற வட இந்திய நதிகளும், காவேரி, கிருஷ்ணா, கோதாவரி என்ற தென்னிந்திய நதிகளும் இருந்து என்ன பயன்.ஆனால் ஜோர்தான் என்ற ஒரு நதி தான்  இஸ்ரேல் எல்லையோரமாக செல்கிறது. இந்த நதியை மட்டும் நம்பி இஸ்ரேலியர்கள் விவசாயம் செய்கிறார்கள். அந்த நாட்டில் தான் சொட்டு நீர் பாசனத்தை(Trip Irrigation) முறையாக பயன்படுத்துகிறார்கள்.